திருப்பதியில் மெட்ரோ ரயில்- காங். எம்.பி. கோரிக்கை
திருப்பதி: திருப்பதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல திருப்பதி ரயில் நிலையம் விரைவில் சர்வதேச தரத்துடன் மேம்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் திருப்பதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் விடப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிந்தாமோகன் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ ரயில் திட்டம் திருப்பதி நகரின் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க உதவும். எனவே இந்தத் திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
மெட்ரோ ரயில் திட்டம் நிறைவற்றப்படுவதாக இருந்தால், திருப்பதி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 7 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் நெல்லூரை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரலாம்.
திருப்பதி கோவில், கிருஷ்ணபட்டணம் கடற்கரை துறைமுகம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம், மன்னவரம், திருப்பதி சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் இணைக்கலாம் என்று கூறியுள்ளார் சிந்தா மோகன்.












Click it and Unblock the Notifications