மேகாலயாவை 100 % கம்ப்யூட்டர் கல்வி பெற்ற மாநிலமாக்க திட்டம்
டெல்லி: மேகாலயா மாநிலத்தை 100 சதவீத கம்ப்யூட்டர் கல்வி பெற்ற மாநிலமாக மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் டெல்லியில் உள்ள மேகாலயா இல்லத்துக்கான கமிஷ்னர் அஜய் பல்லா மற்றும் மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் கரண் பஜ்வா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் மூலம் மேகாலயா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் கல்வி அளிக்கப்பட இருக்கிறது.
இது குறித்து இன்று அம்மாநில முதல்வர் டிடி லபாங் கூறுகையில்,
இந்த திட்டத்தின் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் மேகாலயாவை 100 சதவீத டிஜிட்டல் அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற இருக்கிறோம்.
இதற்காக மைக்ரோசாப்ட், கம்ப்யூட்டர் கல்விக்கான பாடத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள கல்வி மையத்தினருக்கு அளிக்கப்படும் என்றார்.
முதல்வரின் ஆலோசரக் அனிஸ் காந்தி கூறுகையில்,
மைக்ரோசாப்ட் மேகாலயா முழுவதும் பயிற்சி மையங்களை அமைக்க இருக்கிறது. இதன் தாக்கம் நாடு முழுவதும் பள்ளி மூலம் படிப்பவர்கள் மட்டுமல்ல பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களுக்கும் நல்விளைவை உண்டாக்கும் என்றார்.