உலகத் தமிழ் மாநாடு - நியூயார்க் தமிழ்ச் சங்கம் வரவேற்பு

இதுகுறித்து நியூயார்க் தமிழ்ச் சங்க தலைவர் ஆல்பர்ட் செல்லதுரை மற்றும் செயலாளர் பிரகாஷ் எம்.சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதுபோன்ற மாநாட்டுக்காக நீண்ட காலமாக ஏங்கிக் கொண்டிருந்த அமெரிக்க வாழ் தமிழர்கள் தற்போது கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை 9வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என்ற
செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகழ் பெற்ற தமிழறிஞராக, தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் பெரும் பங்காற்றியவருமான முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுவது சாலப் பொருத்தமாகும்.
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க ஓய்வின்றி உழைத்தவர் கருணாநிதி. எனவே இந்த மாநாட்டை மிகப் பெரிய வெற்றியாக மாற்ற நியூயார்க் தமிழ்ச் சங்கம் பாடுபடும்.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞர்களை அடையாளம் காண தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம். அமெரிக்காவிலிருந்து அதிக அளவிலான தமிழறிஞர்கள் கோவை உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications