டிஎன்பிஎல் ஊழியர்களுக்கு 6 கிராம் தங்கக்காசு-ஸ்டாலின் வழங்குகிறார்
கரூர் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன நிரந்தர ஊழியர்களுக்கு 6 கிராம் தங்க காசும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3 கிராம் தங்க காசும் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்குகின்றார்.
இது குறித்து தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முகமது நசீமுத்தீன் வெளியிட்டு செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் 1984ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காகித உற்பத்தியை துவக்கியது. தற்போது காகித உற்பத்தியில் தனது வெள்ளி விழா ஆண்டினை கொண்டாடி வருகிறது.
இதைமுன்னிட்டு, துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் நிரந்தர பணியாளர்களுக்கும் தலா 6 கிராம் தங்க காசும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தலா 3 கிராம் தங்க காசும் வழங்க இருக்கிறது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வெள்ளி விழாவின் போது ஸ்டாலின் பணியாளர்களுக்கு தங்க காசுகளை வழங்குவார் என்றார்.