தமிழக சுற்றுலாத்துறையின் - அருவிகள் சுற்றுலா
மாநிலத்தில் உள்ள முக்கியமான அருவிகளுக்கு 3 நாள் சுற்றுலா மேற்கொள்ளப்படவது இந்த அருவிகள் சுற்றுலாவின் முக்கிய அம்சமாகும்.
கும்பக்கரை, சுருளி, குற்றாலம், மணிமுத்தாறு, பாபநாசம், திற்பரப்பு ஆகிய தென் மாவட்ட அருவிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். சென்னை போன்ற வட பகுதி மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ. 2100 ஆகும். தங்குமிடம், போக்குவரத்து செல்வு இதில் அடக்கம்.
இந்த சுற்றுலாத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். தற்போது பூஜா விடுமுறை எனப்படும் ஆயுதப் பூஜை விடுமுறை வருவதால் அந்த நாட்களில் முழுவதுமாக புக் ஆகி விட்டதாம்.
நீர்வீழ்ச்சிகளில் எப்போது சீசன் இருக்கிறதோ, அந்த சமயத்தில் மட்டுமே இந்த டூர் பேக்கேஜ் அமல்படுத்தப்படும். தற்போது திருவிழா சீசனுடன், அருவிகளிலும் நீர் கொட்டிக் கொண்டிருப்பதால் இந்த டூர் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேபோல அடுத்த கட்டமாக தமிழகத்தில் உள்ள ஜெயின் மதக் கோவில்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் டூர் பேக்கேஜ் ஒன்றை யோசித்து வருகிறதாம். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஜெயின் கோவில்களுக்கு செல்லும் திட்டம் இது.