ஊனமுற்றோர்களுக்கு இலவச செயற்கைக் கால்கள்
மதுரை: ஜெய்ப்பூர் புட் கேம்ப், மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி மற்றும் டவ் இந்தியா சார்பில் ஊனமுற்றோர்களுக்கான செயற்கை கால், காலிப்பர்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் கை , கால் ஊனமுற்றோர் பலர் உள்ளர். இவர்களில் பலர் போதிய வருமானம் இன்றி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு தேவையான செயற்கை கால், காலிப்பர்களை பெற முடிவதில்லை.
இந்த குறையை போக்கும் விதமாக ஊனமுற்றவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பிரதிபலன் பாராமல் ஜெய்ப்பூர் புட் கேம்ப், மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி மற்றும் டவ் இந்தியா சார்பில் ஊனமுற்றோர்களுக்கான செயற்கை பாதம், காலிப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ம் தேதிகளில் இந்த முகாம் நடைபெறுகின்றது.
காலிபர்கள் தேவைப்படுவோர், முருகன் திருமண மஹால், 25 /1 , செவாலியே சிவாஜி ரோடு, சவுத்போக் ரோடு, தி. நகர், சென்னை - 600 017 -ல் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றனர்.
இது குறித்து மேலும் தகவல்களுக்கு 044 - 2669 1616 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.