For Quick Alerts
For Daily Alerts
Just In
ஐ.நா. வெளியிட்ட காந்தி ஸ்டாம்ப்
ஐ.நா.: மகாத்மா காந்தியின் பிறந்த நாள் உலக அகிம்சை தினமாக கொண்டாடப்படுவதைக் குறிக்கும் வகையில், அவரது நினைவாக தபால் தலை ஒன்றை ஐ.நா. வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் உலக அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஐ.நா தபால் பிரிவு, ஒரு டாலர் மதிப்பிலான ஸ்டாம்ப் ஒன்றை வெளியிட்டது. அதில் மியாமியைச் சேர்ந்த பெர்டி பச்சேகா என்பவர் வரைந்த காந்தியடிகளின் ஓவியம் இடம் பெற்றிருந்தது.
ஐ.நா.வில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகாத்மாவிந் 140வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பல்வேறு நாட்டுத் தூதர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Saturday, October 3, 2009, 12:11 [IST]