விமான கடத்தல்-41 ஆண்டுக்கு பின் சரண்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 1968ம் ஆண்டு நியூயார்க்கில் இருந்து ப்யூர்டோ ரிகோ சென்ற விமானத்தை கடத்த முயன்ற கடத்தல்காரனை போலீஸார் சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு சரணடைந்துள்ளார்.
லூயில் அர்மான்டோ பெனா சோல்ட்ரன் என்ற 66 வயது நபர் நேற்று நியூயார்க் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள போலீஸாரிடம் சரணடைந்தார்.
அவரை கைது செய்த போலீஸார் 41 ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி அவர் தான் என்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து நியூயார்க் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இதே விமான நிலையத்தில் வைத்து தான் கடந்த 1964, நவம்பர் 24ம் தேதி அர்மான்டோ தனது கூட்டாளிகள் மூன்று பேருடன் பான் ஆம் 281 என்ற விமானத்தை கடத்த முயன்றார். அவர்கள் கையில் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் விமானத்தை கியூபாவுக்கு திருப்புமாறு கூறினர்.
ஆனால், விமானிகள் சாமர்த்தியமாக அந்த கடத்தல் சம்பவத்தை முறியடித்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் விமானத்தில் இருந்து தப்பித்துவிட்டனர்.
இதையடுத்து போலீஸார் அர்மான்டாவை தவிர்த்து மற்ற மூன்று பேரையும் கைது செய்துவிட்டனர். அவர்கள் அலெஜான்ட்ரோ பிகியூரோ என்பவருக்கு 1969ல் தண்டனை வழங்கப்பட்டது. மற்ற இருவர்களான ஜோஸ் ரபெல் ரியாஸ் குரூஸ் மற்றும் மிகுல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு 1970ல் தலா 15 மற்றும் 12 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
இவர்கள் மூவரும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவை சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். ஆனால், தலைமறைவாக இருந்த அர்மான்டோ தற்போது தான் கிடைத்துள்ளார். 25 வயதில் தப்பியோடிய அவர் தனது இளமை பொழுதை தலைமறைவாக கழித்துவிட்டு தற்போது 66 வயதில் சரணடைந்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க அரசை ஏமாற்றிய அவருக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications