For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சஷ்டி விழா- திருச்செந்தூர் கோவில் பூஜை நேரம் மாற்றம்

Google Oneindia Tamil News

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் சஷ்டி விழாவில் இன்றுமுதல் 5ம் திருவிழா வரை உதயமார்த்தாண்ட அபிஷேக நேரம் மாற்றப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கடந்த 18ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் காலை, மாலை யாகசாலை பூஜைகளும், இரவில் ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் கிரிவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

சஷ்டியை முன்னிட்டு 2ம் திருவிழா முதல் 5ம் திருவிழா வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வருப ஆதாரனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது அதிகாலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக காலை 5 மணிக்கு நடைபெறும் உதய மார்த்தாண்ட பூஜை அபிஷேகம் முன்னதாக 4 மணிக்கே நடைபெறும். 5ம் திருவிழாவான வரும் 22ம் தேதி வரை இந்த பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X