ஆர்.டி.ஐ சட்டம்-தகவல் தருவதில் தமிழ்நாடு படுமோசம்
சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தருவதில் கர்நாடகம் நாட்டிலேயே முன்னணியில் இருப்பதாக தேசிய ஆர்.டி.ஐ. விருதுகள் செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள தகவல் அறியும் கமிஷன்களில் செயல்பாடுகளைக் கண்காணித்து அதற்கேற்ப ரேங்கிங் தரும் பணியில் ஆர்.டி.ஐ. விருதுகள் செயலகம் ஈடுபட்டுள்ளது. இது ஒரு என்ஜிஓ அமைப்பாகும்.
இந்த நிறுவனம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தருவதில் நாட்டிலேயே கர்நாடகா தகவல் கமிஷனன்தான் முன்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் மொத்தம் 35,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், ஒட்டுமொத்த மக்கள் திருப்தியில், 55 சதவீதத்தை கர்நாடகா பெற்றுள்ளதாம்.
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 51 ஆயிரத்து உத்தரவுகளை தகவல் அறியும் ஆணையங்கள் பிறப்பித்துள்ளன. இதில் தமிழ்நாடு, உ.பி, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இடம் பெறவில்லை.
தமிழக தகவல் ஆணையம் 40 ஆயிரம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளபோதிலும், இதுவரை 900 உத்தரவுகளின் நகல்களை மட்டுமே அது வழங்கியுள்ளது. அதேபோல, உ.பி. மாநிலம் எந்த உத்தரவு நகலையும் வழங்கவில்லை. சிக்கிம் விவகாரத்திலும் இதே கதைதான். இதனால்தான் இந்த மூன்று மாநிலங்களையும் இந்த கணக்கில் சேர்க்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications