ஜூன் 23ம் தேதியை சர்வதேச விதவையர் தினமாக அனுசரிக்க செர்ரி பிளேர் கோரிக்கை

உலகம் முழுவதும் 12 நாடுகளில் லூம்பா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை விதவையர் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக இருக்கிறார் செர்ரி பிளேர்.
தற்போது தனது பிரசாரத்தின் ஒரு கட்டமாக டெல்லி வந்துள்ளார் செர்ரி.
அங்கு நடந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் உள்ள விதவையர் நலன் குறித்து செர்ரி பிளேர் கூறுகையில், விதவைப் பெண்களின் பிரச்சினைகள அங்கீகரித்து அவற்றுக்குத் தீர்வு காண ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்கவுள்ளோம். இதற்காக உலகம் முழுவதும் ஆதரவு திரட்டவுள்ளோம்.
ஜூன் 23ம் தேதியை சர்வதேச விதவையர் தினமாக அனுசரிக்க வேண்டும் எனவும் ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த தினத்தை தற்போது நாங்கள், சர்வதேச விதவையர் தினமாக ஏற்கனவே அனுசரித்து வருகிறோம்.
இதற்கு அனைத்து நாடுகளும் ஆதரவு தர வேண்டும். விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உலகளாவியது.
இந்தியாவில் 3.5 கோடி விதவைப் பெண்கள் உள்ளனர். அவர்களில் பலரும் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர் என்றார் செர்ரி பிளேர்.












Click it and Unblock the Notifications