நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரை 'கொன்ற' எப்பிஐ!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி ஆங்கில நாவலாசிரியர் விஎஸ் நைப்பால் உயிரோடு இருக்கும்போதே, அவரை இறந்தவராகக் குறிப்பிட்டுள்ளது அமெரிக்க ரகசிய போலீஸ் எப்பிஐ.
நைப்பாலின் மனைவி நாதிரா ஒரு பத்திரிகையாளர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவரது சகோதரரை சிலர் கொலை செய்துவிட்டனர். அது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் எப்பிஐ, தொடர்புடைய கோப்பில், விஎஸ் நைப்பால் படத்தின் கீழ் 'the late VS Naipual, Nobel Prize winner', அதாவது இறந்துவிட்டவர் என பொருள்படும் வகையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தவறை சுட்டிக் காட்டியுள்ளது ஒரு இணையதளம்.
77 வயதாகும் நைப்பால் ட்ரினிடாடில் பிறந்த இந்தியர். உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளுள் ஒருவகராகப் பார்க்கப்படுபவர்.












Click it and Unblock the Notifications