For Daily Alerts
Just In
விண்டோஸ் 7 வெற்றியில் தமிழரின் பங்கு!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 25 அதிகாரிகளில் 6 பேர் இந்தியர்களாம். சாப்ட்வேர் உற்பத்திப் பிரிவில் இந்த 6 பேருக்கும் மிக முக்கியப் பங்குண்டு.
குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த சோமசேகர் என்பவர்தான் சாப்ட்வேர் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். அந்தப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் என்ற பதவியில் உள்ளார் அவர்.
இவரது தலைமையில் உலகம் முழுவதும் 4,000 பேர் பணிபுரிகிறார்கள். அண்மையில் அறிமுகமான விண்டோஸ் 7 சாப்ட்வேரும் இவரது தலைமையில் உருவானதுதான்.
இவரைத் தவிர, மும்பையின் அமித் மிட்டல், கான்பூரின் அமிதாப் ஸ்ரீவத்சவா, சண்டிகரைச் சேர்ந்த குர்தீப் சிங் பால், ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்ய நடெல்லா மற்றும் டெல்லியைச் சேர்ந்த அனூப் குப்தா ஆகியோர் முக்கிய பொறுப்பு வகிக்கும் மற்ற இந்தியர்கள்.
Story first published: Saturday, October 31, 2009, 13:05 [IST]