நவ. 28-ல் கலைமாமணி விருது விழா!
2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 28ஆம் தேதி நடக்கிறது.
சென்னை கலைவானர் அரங்கில் நடக்கும் இந்த விழாவில் திரையுலகம் மற்றும் கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் திரளாகப் பங்கேற்கிறார்கள்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைத்துறையில் செயற்கரிய சேவை புரிந்த கலைஞர்களை சிறப்பிக்கும் பொருட்டு மாநில அளவிலான கலைமாமணி விருதினை வழங்கி வருகின்றது. அவ்வகையில் 2007 ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் 71 சிறந்த கலைஞர்களின் பட்டியலை, தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா, 28.11.2009 அன்று மாலை 6 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நல்விழாவுக்கு, முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையேற்று, கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும், கலைமாமணி விருதை ஏற்கனவே பெற்ற மூத்த கலைஞர்கள் 3 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் பொற்கிழித் தொகையும், சிறந்த நாடகக் குழுவுக்கு சுழற்கேடயமும், சிறந்த கலை நிறுவனத்துக்கு கேடயமும் வழங்கிச் சிறப்பிக்க இசைவு தந்துள்ளார்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இயல் இசை மன்றம் செய்து வருகின்றது", என அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications