சென்னை ஐ.ஐ.டி. உதவி பேராசிரியருக்கு விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் தில்லைராஜனுக்கு எம்பிஏ படிப்பில் நிதி நிர்வாகத் துறைக்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள தேவாங் மேத்தா பிஸினஸ் ஸ்கூல் சார்பில், எம்.பி.ஏ. படிப்பில் மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
நிதி நிர்வாகத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக சென்னை ஐ.ஐ.டி. உதவி பேராசிரியர் தில்லைராஜன், 2009ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications