திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம்
Subscribe to Oneindia Tamil
நகரி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரமோற்சவ விழா இன்று மாலை கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழா 21ம் தேதி வரை நடக்கிறது.
காலையில் கோவிலில் குங்கும லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தனர்.
பிரமோற்சவ நாட்களில் காலையிலும், மாலையிலும் பத்மாவதி தாயார் வாகன சேவை, சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications