சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பில் வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை ரியாத் நகரில் ரத்த தான முகாம் நடத்தப்படவுள்ளது.
இது இந்த அமைப்பு இங்கு நடத்தும் 7வது ரத்ததான முகாம் ஆகும். மெக்கா-குரைஷ் ரோட்டில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் காலை 11 மணியிலிருந்து ரத்தம் தானமாக பெறப்படும்.
இந்த ரத்ததான முகாமில் 300 பேர் பங்கெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடம் நடந்த முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் தமிழர்கள் மட்டுமின்றி ரியாத் வாழ் பல்வேறு நாட்டினரும் மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
இந்த முகாமுக்கு ரியாதின் பல பகுதிகளிலிருந்தும் வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே தானமளிக்க விரும்புவோர் கீழ்க்கண்டவர்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
நவ்லாக்- 0509181890, ஃபைஸல்- 0507809247,
முஹம்மது மாஹீன்- 0542540860, ஃபாரூக்- 0502816906.
இடம்: கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி, ரியாத், சவுதி அரேபியா.
நாள்: 20-11-2009, வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல்