பறவைகள் வருகை அதிகரிப்பு - வேடந்தாங்கல் சரணாலயம் நாளை திறப்பு

சென்னையில் இருந்து 80 கி.மீ தொலைவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து செல்வது வழக்கம்.
வேடந்தாங்கலில் அக்டோபர் மாதவாக்கில் பறவைகள் வருகை தொடங்கும். அதன்பிறகு, நவம்பர் மாதத்தில் பறவைகள் வருகை அதிகரிக்கும். டிசம்பர் மாதம் தொடங்கி, மே அல்லது ஜுன் வரை சீசன் நீடிக்கும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. கடந்த வாரத்தில் மழை தொடங்கியதும் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து, பறவைகளும் வரத் துவங்கியுள்ளன.
தற்போது, வேடந்தாங்கலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, பாம்புத்தாரா, மண்வெட்டி வாயன், சிறிய நீர்காகம், வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர்உடல் அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, வக்கா ஆகிய பறவைகள் ஏரியில் உற்சாகமாக வலம் வருகின்றன.
நாளை முதல், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.2. கேமராவுக்கு ரூ.25, வீடியோ கேமராக்கு ரூ.150.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications