அரசு சித்த மருத்துவனையில் விரைவில் மசாஜ் சிகிச்சை!
நெல்லை: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக ரூ.80 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
கல்லூரியில் மாணவர்களுக்கு கம்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் ஓதுக்கப்பட்டு ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பக்கவாதம், முடக்குவாதம், கை, கால், உடல் வலி, உடல் கொழுப்பு குறைத்தல் போன்ற சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு நவீன சிகிச்சைகள் அளிக்க வசதியாக மசாஜ், நீராவி குளியல், நடை பயிற்சி (டிரேட் மில்), உடற்பயிற்சி சைக்கிள் உள்ளிட்ட கருவிகள் வழங்க கல்லூரி நிர்வாகம் சார்பில அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது.
இதனை ஏற்று அனைத்து நவீன கருவிகளையும் வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு 2 நீராவி குளியல் கருவிகள் வந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள கருவிகள் வழங்கப்பட்டு விடும் எனவும் இதன் மூலம் வசதியானவர்கள் மட்டும் பெற்று வந்த உயர் சிகிச்சைகள் ஏழைகளுக்கும் இலவசமாக கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிகிச்சைகளை ஓரே இடத்தில் மேற்கொள்ள வசதியாக மருத்துவக் கல்லூரி வாளகத்தில் 80 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் பணிகளை முடித்து நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கல்லூரி முதல்வர் சவுந்திராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications