தமிழக கல்வெட்டுகள் கணினியில் பதிவு செய்து பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: படியெடுக்கப்பட்ட தமிழக கல்வெட்டுகளை கணினியில் பதிவு செய்து பாதுகாக்கும் பணியை தொல்லியல் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், 'தேசிய அளவில் உள்ள 60,000 கல்வெட்டுகளில் தமிழ்நாட்டில் சுமார் 25,000 கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு முனைப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை 25 மாவட்டங்களைச் சேர்ந்த 22,000 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. தமிழகக் கல்வெட்டுகளைக் கணினி மயமாக்கும் பணி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்' என்றார்.
தொல்லியல் துறை முதன்மைச் செயலர் ஸ்ரீதர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் அ.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications