ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்கம்
ஊத்தங்கரை ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கம் கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள வித்தியாமந்திர் கலை அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 19,20 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா இன்று ஊத்தங்கரை வித்தியாமந்திர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர், மலேசியா நாட்டுப்பேராளர்கள் வந்திருந்தனர்.தொடக்க விழாவில் கலந்துகொண்டவர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் க.அருள் வரவேற்றார். முனைவர் சிலம்பு நா.செல்வராசு கருத்தரங்க அறிமுகவுரையாற்றினார்.
ஆர் அமைப்பின் ஓராண்டு செயல்பாட்டில் பல இழப்புகளும் ஆக்கங்களும் கிடைத்துள்ளன.தமிழ்ச்செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவது தமிழாக்கமாக அமைகிறது. வ.ஐ.சுப்பிரமணியன்,கமில் சுவலபில் ஆகியோர் இயற்கை எய்தியமை தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.166 பேராளர்கள் கட்டுரை வழங்கியுள்ளனர்.
துளிர், இதழ், மலர் என்னும் மூன்று கருத்தரங்க ஆய்வுக்கோவைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. கல்லூரிச் செயலாளர் கே. செல்வராசு, கு.செங்கோடன் வாழ்த்துரை வழங்கினர்.
பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.பெரியசாமி அவர்கள் வாழ்த்துரையாற்றியதுடன் கருத்தரங்க ஆய்வுக்கோவைகள் சிறப்பை எடுத்துரைத்தார். உதகமண்டலம் அரசு கல்லூரிப் பேராசிரியர் முனைவர் க.பாசுகரன் அவர்கள் இன்றைய ஆய்வுப்போக்குகளை எடுத்துரைத்தார்.
இந்திய அரசின் செம்மொழி நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர் இரா.அறவேந்தன், முனைவர் கேசவ.பழனிவேல், முனைவர் இரா.கலைவாணி, முனைவர் மு,இளங்கோவன், முனைவர் அ.செல்வராசு ஆகியோருக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களைச் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் சு.பழனியாண்டி அறிமுகம் செய்து நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் பெரு.மதியழகன் அவர்கள் ஆய்வுக்கோவைகளைப் பற்றிய மதிப்பீட்டு உரை வழங்கினார். ஆய்வுக்கோவைகளை வெளியிட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் வெளியிட்டு உரை நிகழ்ந்நினார்.
சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர் இரத்தின.வேங்கடேசன், கவிஞர் இறை.மதியழகன், கவிஞர் வேள்.பாரி ஆகியோர் முதற்படிகளைப் பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார்.












Click it and Unblock the Notifications