தமிழனின் உள்ளங்கையில் உலகம் - தமிழ் இணையப் பயிலரங்கம்
சென்னை: சென்னை அருகே உள்ள சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியில் தமிழனின் உள்ளங்கையில் உலகம் என்ற பெயரில் தமிழ் இணையப் பயிலரங்கம் நாளை நடைபெறவுள்ளது.
பயிலரங்கம் நடைபெறும் இடம்- சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி, நாராயணசாமி நகர், தண்டலம், சென்னை.
நாள்: 23.12.2009, புதன் கிழமை,நேரம் காலை 10 மணி
தலைமை தாங்குபவர், கே.என்.இராமச்சந்திரன்(நிறுவுநர், சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)
குற்று விளக்கேற்றல்: திலகவதி இராமச்சந்திரன்(அறங்காவலர்)
வரவேற்புரை: பேராசிரியர் இளங்கோவன்(கணிப்பொறித் துறைத் தலைவர்)
வாழ்த்துரை: முனைவர் ப.விசயபாசுகரராசு(முதல்வர்)
சிறப்பு விருந்தினராக சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி இயக்குநர் முருகேசன் கலந்து கொள்கிறார். விருந்தினரை அறிமுகம் பேராசிரியர் விசயகுமார் பேசுகிறார்.
"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" என்ற தலைப்பில் உரை மற்றும் பயிற்சியை அளிக்கிறார் முனைவர் மு.இளங்கோவன். பேராசிரியர் இராமகிருட்டினன் நன்றியுரை நவில்கிறார்.












Click it and Unblock the Notifications