ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது- ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் கோலாகல வழிபாடு

இன்று வைகுண்ட ஏகாதசி. இதையொட்டி வைணவக் கோவில்களில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து என இரு பகுதிகளாக வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 17ம் தேதி ஏகாதசி விழா தொடங்கியது.
18ம் தேதி பகல் பத்தின் முதல் நாளாகும். பகல் பத்து முடிந்து இன்று ராப்பத்து தொடங்கியது. அதன் முதல் நிகழ்ச்சியாக சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.
இன்று அதிகாலை மூனே முக்கால் மணியளவில் பெருமாள், விருச்சிக லக்கினத்தில், புறப்பட்டார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
சொர்க்க வாசல் திறப்பையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்தனர். அனைவரும் சொர்க்க வாசல் திறப்பையடுத்து அதன் வழியாக சென்று பக்தியுடன் பெருமாளை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications