ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது- ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் கோலாகல வழிபாடு

Subscribe to Oneindia Tamil

Sorkavasal tirappu held in Srirangam Ranganathar Temple
ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்தனர்.

இன்று வைகுண்ட ஏகாதசி. இதையொட்டி வைணவக் கோவில்களில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து என இரு பகுதிகளாக வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 17ம் தேதி ஏகாதசி விழா தொடங்கியது.

18ம் தேதி பகல் பத்தின் முதல் நாளாகும். பகல் பத்து முடிந்து இன்று ராப்பத்து தொடங்கியது. அதன் முதல் நிகழ்ச்சியாக சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.

இன்று அதிகாலை மூனே முக்கால் மணியளவில் பெருமாள், விருச்சிக லக்கினத்தில், புறப்பட்டார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

சொர்க்க வாசல் திறப்பையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்தனர். அனைவரும் சொர்க்க வாசல் திறப்பையடுத்து அதன் வழியாக சென்று பக்தியுடன் பெருமாளை வழிபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+