இந்தியப் பெண்களை முத்தமிட கூடாது-இங்கிலாந்து
லண்டன்: இந்தியாவில் இருக்கும்போது இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடியுங்கள். இந்தியப் பெண்களை முத்தமிடக் கூடாது. மாறாக கை கூப்பி நமஸ்தே என்று சொல்லிப் பழகுங்கள், கை குலுக்குவதைக் கூட தவிருங்கள் என்று தனது நாட்டவருக்கு இங்கிலாந்து இந்திய வர்த்தக கவுன்சில் அறிவுரை கூறியுள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்கப் போகும் நிறுவனங்களுக்கான அறிவுரை இது.
இந்த வாரம் இது தொடர்பான ஒரு வகுப்பு ஒன்றையும் இந்த கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த வகுப்பில், பிரிமிங்காமைச் சுற்றி உள்ள பல்வேறு தொழில்நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அவர்களிடம், உங்களது வர்த்தகத்தை இந்தியாவில் மேற்கொள்ள முடிவு செயதால், நீங்கள் சில பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
பல இங்கிலாந்து நிறுவனங்களின் அதிகாரிகள், இந்தியாவுக்குப் போகும் போது இதில் பெரும் தவறுகள் செய்து விடுகிறார்கள்.
இந்தியாவின் பழக்க வழக்கம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும்.
இன்று மேற்கத்திய நாடுகளில் பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் கிழக்கில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த பொருளாதார வளர்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது. கிழக்கத்திய நாடுகளில் நமது சந்தையை உருவாக்கிக் கொள்ள அருமையான வாய்ப்பு இது.
ஆனால் அந்தப் பிராந்தியத்தின் குணாதிசயங்கள் தெரியாமல் பலர் தவறு செய்து விடுகின்றனர்.
இங்கிலாந்து மக்களுக்கு இந்தியர்களின் பழக்க வழக்கம், மனப்பான்மை நன்கு தெரியும். காரணம், இங்கு பெருமளவிலான இந்தியர்கள் இருப்பதால் அவர்களுடன் பழகும் வாய்ப்பு அவர்களுக்கு அதிகம் உள்ளது.
ஆனால் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு இதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
எனவே இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் இங்கிலாந்து நிறுவனங்கள் அங்குள்ள சூழ்நிலையைப் பழகிக் கொள்ள வேண்டும். கலாச்சார உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்திய மக்களிடம் நீங்கள் நல்ல பெயரெடுக்க முடியும்.
இந்தியப் பெண்களை சந்திக்க நேர்ந்தால் இந்திய முறைப்படி நமஸ்தே என்று கை கூப்பி வணங்கப் பழகுங்கள். இங்கிலாந்து முறைப்படி முத்தம் கொடுப்பதைத் தவிருங்கள். கை குலுக்குவதிலும் கூட கவனம் தேவை என்று அந்த பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்பட்டது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications