ஆரியங்காவு வனப்பகுதியில் பிரசவத்தின் போது தாய், சேய் யானைகள் பலி

தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு வனப்பகுதியில் உள்ள ராஜகூப்பு எனும் பகுதியில் ஐந்து யானை குழி என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் கர்ப்பமான காட்டு யானை ஓன்று குட்டி போட்டு கொண்டிருந்த நிலையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது 30 வயது பெண் யானை குட்டி போட்டு பாதி நிலையில் இறந்து கிடப்பது கண்டு தென்மலை டிஎப்ஓ சலீம்க்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து புனலூர் கால்நடை மருத்துவமனை மருத்தவர் தலைமையில் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.
கர்ப்பிணி யானை குட்டி ஈன்ற நிலையில் இந்த வனப்பகுதியில் இறந்த கிடந்த சம்பவத்தை கேள்விபட்டு அப்பகுதியி்ல் ஏராளமானோர் திரண்டு பெண் யானைக்கும், அதன் குட்டிக்கும் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து மருத்துவர் குழு கூறுகையில் அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டதால்தான் தாயும், சேயும் பலியாகியதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications