அக்டோபர் 1-இன்று சர்வதேச முதியோர் தினம்

முதியவர்களை ஒவ்வொரு மனிதனும், சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி முதன் முதலாக 1991 ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் இது அனுசரிகக்ப்படுகின்றது.
உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.
முதுமையை மதிப்போம், முதியோர்களை அரவணைப்போம், மூத்த குடிமக்களாகிய அவர்கள் கெளரவமாக வாழ வழி வகுப்போம்.












Click it and Unblock the Notifications