செம்மொழி மாநாடு: உலகளாவிய கவிதைப்போட்டி - முதல் பரிசு ரூ.​ 1 லட்சம்

Subscribe to Oneindia Tamil

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி உலகம் தழுவிய அளவில் பிரமாண்ட கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெல்வோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படவுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான,​​ பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவின் 2-வது ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவரும்,​​ உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் கவியரங்கம்,​​ கருத்தரங்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.​

பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி,​​ உலக அளவிலான கவிதைப் போட்டி நடத்தப்பட உள்ளது.​ இதற்காக உலக அளவில் விளம்பரம் செய்யப்படும்.​ போட்டி தலைப்பு குறித்த அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும்.​

முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.​ 2வது பரிசாக ரூ.75 ஆயிரமும்,​​ மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும்,​​ ஆறுதல் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை,​​ கட்டுரை,​​ பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தலைப்பில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

தற்போது பல்கலைக்கழக அளவில் இப்போட்டிகள் நடந்து வருகின்றன.​ மாநில அளவிலான போட்டியை மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார்.​

வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும்,​​ 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும்,​​ 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்றார் பொன்முடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+