நெல்லை கோவிலில் காந்திமதி-நெல்லையப்பர் திருக்கல்யாணம்

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 23ம்தேதி காந்திமதியம்மாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் காந்திமதியம்மாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா நடந்தது.
இன்று 3ம் தேதி அம்மாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருக்கல்யாண விழா நடந்தது. லிழாவில் சுவாமி, அம்பாளுக்கு தங்க கீரிடமும், அம்பாளுக்கு தங்க தாலியும அணிவிக்கப்பட்டது.
திருகல்யாண நிகழ்ச்சியை அனைத்து மக்களும் பார்க்க வசதியாக 3 இடங்களில் பிளாஸ்மா டிவி வைக்கப்பட்டிருந்தது. கோயில் முழுவதும் அலங்கார மின் விளக்குகளால் ஜொலித்தது.
திருகல்யாண நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாமி அம்பாள் பட்டண பிரவேசமும் நடந்தது. 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடக்கிறது.












Click it and Unblock the Notifications