துபாயில் பிறைமேடை இதழ் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் தாய்ச்சபையின் 62ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பிறைமேடை மாதமிருமுறை இதழ் வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது.
ஈடிஏ அஸ்கான் தொழுகைக்கூடத்தில் நாளை வியாழன் கிழமை மாலை விழா நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்க உள்ளார்.
இத்தகவலை அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார். நிகழ்ச்சி தொடர்பான விவரங்களுக்கு 050 51 96433 / 050 4753052 / 050 67 65 812 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications