மாற்றுத்திறனாளிகள் இந்தியாவில் அதிகம்: அமைச்சர் நெப்போலியன் தகவல்
நெல்லை: ஆஸ்திரேலிய நாட்டின் மக்கள் தொகையை விட இந்தியாவில் மாற்று திறனுடையோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக நெல்லையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் நெப்போலியன் தெரிவித்தார்.
நெல்லையில் மாற்று திறனாளிகள் பேரணி, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
விழாவில் 204 பேருக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மத்திய அமைச்சர் நெப்போலியன் பேசியதாவது:
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2.19 கோடி மாற்று திறனுடையோர் உள்ளனர். இதில் 1.06 கோடி பேர் கண் பார்வையற்றோர், 61 லட்சம் பேர் கை, கால் ஊனமுற்றோர், 30லட்சம் பேர் வாய் பேசமுடியாத, காது கேட்கும் திறனற்றோர், 22 லட்சம் பேர் மனவளர்ச்சி குன்றியோர் ஆவர்.
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2 கோடியோ 6 லட்சம் பேர். இதைவிட அதிகமாக இந்தியாவில் மாற்று திறனுடையோர் உள்ளனர். வருகின்ற 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 2.50 கோடியை தாண்டிவிடும்.
தமிழகத்தில் 9.65 லட்சம் மாற்று திறனுடையோர் உள்ளனர். எனது துறையின் மூலம் என்னென்ன வசதிகள், உரிமைகள் உள்ளதோ, அத்தனையும் மாற்று திறனுடையோருக்கு பெற்று தரப்படும்.
மாற்று திறனுடையோருக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கி இந்தியாவுக்கே முன்னோடி என நிருபித்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி.
இந்தியாவில் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றுவதில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது' என்றார்.












Click it and Unblock the Notifications