அடிகளாசிரியருக்கு தொல்காப்பியர் விருது - வழங்கினார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Tholkappiyar Award
சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் வழங்கப்படும் தொல்காப்பியர் விருதினை மூத்த தமிழறிஞர் அடிகளாசிரியருக்கு முதல்வர் கருணாநிதி இன்று வழங்கினார்.

இதேபோல இளம் தமிழறிஞர்களுக்கு இளம் அறிஞர் விருதுகளையும் வழங்கி அவர் கெளரவித்தார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கொரமண்டல் ஓட்டலில், "பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை'' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.

பின்னர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் விருதுகளை அவர் வழங்கினார்.

குடியரசுத் தலைவரின் தொல்காப்பியர் விருதினை 100 வயதாகும் மூத்த தமிழஞறிஞர் பேராசிரியர் அடிகளாசிரியருக்கு வழங்கிக் கெளரவித்தார் முதல்வர். அவருக்கு ரூ. 5 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.

2005-2006-ம் ஆண்டிற்கான இளம் அறிஞர் விருதினை' முனைவர் இரா.அறவேந்தன் (தாமோதரன்), முனைவர் ய. மணிகண்டன், முனைவர் சி.கலைமகள், முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர், முனைவர் கே.பழனிவேலு ஆகியோருக்கு அளித்தார்.

2006-2007-ம் ஆண்டிற்கான "இளம் அறிஞர் விருது'' முனைவர் க.சந்திரா, முனைவர் அரங்க. பாரி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் மா.பவானி, முனைவர் இரா.கலைவாணி;

2007-2008-ம் ஆண்டிற்கான "இளம் அறிஞர் விருது'' பெறவுள்ள முனைவர் அ.செல்வராசு, முனைவர் ப. வேல்முருகன், முனைவர் ஆ.மணவழகன், ச.சந்திரசேகரன், முனைவர் சா.சைமன் ஜான் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+