அக்பர் கொண்டாடிய தீபாவளி

Subscribe to Oneindia Tamil

மொகலாயர் காலத்தில் தீபாவளிக்கு அவர்கள் வைத்த பெயர் ஜெஷன்-இ-சிகராசன். அலங்கார அகல் விளக்குகளின் அணி வரிசையைக் கண்டு பிரமித்து அவர்கள் இந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

மொகலாய மன்னர்களில் அக்பர்தான் முதன் முதலில் பெரிய அளவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்கள். அவரது மனைவி ஜோதாபாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் தீபாவளியை அவர் கொண்டாடுகிறார் என்று சொல்வதுண்டு.

ஆனால், அக்பர் தீபாவளி அன்று பல துறைகளைச் சேர்ந்த மேதைகளை அழைத்து கவுரவித்து பரிசுகளை அள்ளித் தந்திருக்கிறார். அக்பர் காலத்தில் இருந்த பிரபல வரலாற்று ஆசிரியர் அபுல் பசல், தனது அயின்-இ-அக்பரி என்ற புத்தகத்தில் அக்பர் கால தீபாவளி பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

ஆக்ரா மட்டுமின்றி, நாடு முழுவதும் தீபாவளியைக் கொண்டாட அக்பர் உத்தரவிட்டாராம். வீடுகளில் பெரிது பெரிதாக இந்துக் கடவுள் சிலைகள் செய்து கையில் விளகு வைத்துதிருப்பது போல வடிவமைத்தாராம். வண்ண விளக்குகள் வைத்து பட்டாசு வெடிக்கவும் அவர் அனுமதித்ததாராம். முஸ்லிம் அல்லாத பண்டிகைக்கு அவர் தந்த முன்னுரிமை பலரையும் வியக்க வைத்தது என்று எழுதியுள்ளார்.

டெல்லி முழுவதும் வாண வேடிக்கைகள் விளக்கு அலங்காரங்களால் மினனிக் கொண்டிருப்பதை குதுப்பினாரில் இருந்து அக்பர் ரசிப்பாராம். பலரும் இந்த கோபுரத்தின் மீது ஏறி டில்லி மின்னுவதைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். தீபாவளி தினத்தன்று பல இந்து ஏழைக் குடும்பங்களுக்கு அக்பர் உதவுவார்.

அன்றே இருந்திருக்கிறது மத நல்லிணக்கம் என்பது பெருமைக்குரிய விஷயம் இல்லையா.

தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+