Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரித்திர நாவலான அரவிந்தர் வாழ்க்கை வரலாறு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை, சரித்திர நாவலாக எழுதியுள்ளார் அரூப் மித்ரா என்ற ஓவிய ஆசிரியர்.

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சர்வதேசக் கல்வி மையத்தில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அரூப் மித்ரா.

இவர் அரவிந்தரின் வாழ்வால் ஈர்க்கப்பட்டவர். இதனால், அரவிந்தர் வரலாறு குறித்த அனைத்து நூல்களையும் ஆராய்ந்தார்.

இதன் அடிப்படையில், இன்றைய இளைய தலைமுறைக்கு அரவிந்தரின் வாழ்க்கைச் செய்தி சேர வேண்டும் எனற நோக்கத்தில், ஆங்கிலத்தில் அரவிந்தரின் வாழ்க்கையை, சில கற்பனைக் கதாபாத்திரங்களோடு கலந்து உத்தரயோகி என்ற சரித்திர நாவலாக எழுதி வெளியிட்டுள்ளார்.

இது குறித்துக் அரூப் மித்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்த நாவலை எழுத 21 ஆண்டுகள் முயற்சி செய்தேன். ஏழு ஆண்டுகள் அரவிந்தர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று தகவல்கள் சேகரித்தேன்.

நாவல்களை விரும்பிப் படிக்கும் இளைய தலைமுறையினருக்கு அரவிந்தர் வாழ்க்கை தெரிய வேண்டும் என்பதற்காக இதை எழுதியுள்ளேன்' என்றார்.

அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்ததன் நூற்றாண்டு விழா, இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+