பி்ன்னணிப் பாடகர் ஜேசுதாஸ் வாழ்க்கை சரிதம்-ஆங்கில நூல் வெளியிடு

பிரபல கர்நாடக இசை கலைஞர், பின்னணிப் பாடகர் டாக்டர் கேஜே ஜேசுதாசின் சுயசரிதம் மை லைப் ஆன்ட் மை தாட்ஸ் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் வெளியிட்டு விழா கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
நூலை பிரபல கவிஞர் ஓஎன்வி குருப் வெளியிட கேரள அரசு உள்துறை செயலாளர் கே ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.
நூலை வெளியிட்டு கவிஞர் குரூப் பேசுகையில்,கேரளாவின் பெருமையை காப்பாற்றி வருபவர் ஜேசுதாஸ். மாநிலத்தின் கலாச்சார பெருமையான கதகளி, தென்னை போன்றவை போல அவரும் மாநிலத்தின் அடையாளம்.
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜி தேவராஜன் இசையில் நிறைய பாடல்களை ஜேசுதாஸ் பாடியுள்ளார். பலமுறை அவர்களுக்குள் வாக்குவாதங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் ஜேசுதாஸ் பாட்டு பாடினால் அவை எல்லாம் மறைந்து விடும் என தேவராஜன் மாஸ்டரே பல முறை கூறியுள்ளார்.
பஞ்சமம் என்ற ஒரேயொரு சத்தத்தை கொண்டு வசந்தம் என்ற காலத்தை வரவழைக்கும் அபூர்வ ஆற்றலை பெற்ற குயிலை போன்றவர் அவர் என்றார் குரூப்.












Click it and Unblock the Notifications