மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Subscribe to Oneindia Tamil

Triplets
ராஜ்கோட்: மகளுக்காக தன் வயிற்றில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட 3 சிசுக்களை சுமந்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த தாய்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஷோபனா சாவ்தாவின் (47) மகள் பாவிகா (26). பாவிகாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் செளரப் கத்வாடியா (28) என்பவருடன் திருமணம் நடந்தது.

ஆனால், பாலிகாவுக்கு கருப்பை இல்லை. இந்தக் குறைபாடு இருப்பது தெரிந்தும் அவரை காதல் திருமணம் செய்தார் செளரப்.

இந் நிலையில் சூரத்தைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா நட்கர்னியின் உதவியோடு பாவிகாவின் முட்டைகள் எடுக்கப்பட்டு செளரபின் விந்துவின் உதவியால் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு, அவை ஷோபனாவின் கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.

முதலில் வேறு பெண்களின் கருப்பையில் சிசுக்களை வளர்க்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், தானே தனது மகளின் சிசுக்களை சுமக்க முன் வந்தார் ஷோபனா.

இதையடுத்து அவரது கருப்பையில் வைக்கப்பட்ட முட்டைகளில 3 சிறப்பாக வளர்ந்து சிசுக்களாகியுள்ளன. இதனால் தனது மகளுக்கு 3 குழந்தைகளை பரிசளிக்கவுள்ளார் ஷோபனா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+