108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 545 ஆக உயரும்: துணை முதல்வர் தகவல்
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: தமிழகத்தில் 108 ஆம்புலன்சின் எண்ணிக்கை 545 ஆக உயர்த்தப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளத்தில் தாலுகா அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்.
விழாவில் ரூ.18.53 கோடி மதிப்பிலான திட்டபணிகளை துவங்கி வைத்து துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது,
தமிழகத்தில் 385 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. மக்களின் நலன் கருதி நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கையை 545 ஆக உயர்த்தப்பட உள்ளது. இது வரை 108 சேவையின் மூலம் ஆபத்தான நிலையில் இருந்த 24 ஆயிரத்து 375 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 14 ஆயிரத்து 154 பேர் இந்த சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்றார்.











Click it and Unblock the Notifications