வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம்-சிறையில் சீமான் எழுதும் புத்தகம்
தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் எனது மீனவனை அடித்தால் நான் உனது சிங்கள மாணவனை அடிப்பேன் என பேசிய நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை சென்ற மாதம் தமிழக காவல்துறை கைது செய்து அவரைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறைச்சாலையில் அடைத்தது.
நாம் தமிழர் என்னும் அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மற்றும் ஈழப்பிரச்சனை தொடர்பாக மிகவும் பரபரப்புடன் இயங்கிய சீமான் சிறையில் கடந்த ஒரு மாத காலமாக அடைக்கப்பட்டுள்ளார். தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது.
சீமானுக்கு நீண்ட காலமாக தமிழினம் தொடர்பான நூல் எழுதும் திட்டம் இருந்தது. ஆனால் அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை. சிறையில் இருக்கும் தற்பொழுதைய நிலையில் பல்வேறு நூலைப் படிப்பதிலும் குறிப்புக்களை எடுப்பதிலும் முழுக்கவனம் செலுத்தும் அவர் தனது நூல் எழுதும் பணியையும் தொடங்கி உள்ளார்.
தமிழ் தேசியத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு,தமிழினம் ஏன் ஒடுக்கப்பட்டது? தமிழர்கள் எவ்வாறு தங்கள் இனத்தை மறந்தார்கள், திராவிடம் எவ்வாறு தமிழினத்தை வீழ்த்தியது? என்பனவற்றை வரலாற்று செய்திகளுடன் மிகப்பெரிய ஆவணமாக எழுதி வருகின்றார். அவர் எழுதி வரும் நூலின் பெயர்
வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம்.
சீமானைச் சிறையில் நன்கு ஓய்வெடுக்கச் சொல்லுங்கள். புத்தகம் எழுதுவதை வெளியில் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று சீமானின் அம்மா, அவரது இளைய மகனிடம் சொல்லி அனுப்பியதற்கு, சீமான், ஓடாத மானும், போராடாத இனமும் வென்றதாகச் சரித்திரம் இல்லை என்று என் தலைவர் சொல்லி இருக்கின்றார். நான் என் தலைவர் சொன்னபடி போராடுகின்றேன். சிறையில் நூல் எழுதுகின்றேன் என்று கூறினாராம்.
இந்த நூல் சீமான் சிறையில் இருந்து வெளிவந்தபின் வெளிவரும் என்று தெரிகின்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications