8 இந்திய மாணவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழிக்கான விருது
மும்பை: இந்தியாவைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் சர்வதேச ஆங்கில மொழிக்கான ஐஇஎல்டிஎஸ் விருது கிடைத்துள்ளது.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட விருது இது. இந்த விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். அத்தோடு, விருது பெறும் மாணவர்களின் படிப்புக் கட்டணத்தையும் பிரிட்டிஷ் கவுன்சிலே ஏற்றுக் கொள்ளும்.
விருது பெறும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி எந்த நாட்டில் உள்ள சர்வதேச ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேரப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். தற்கான டியூஷன் ஃபீஸ் முழுவதையும் பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்றுக் கொள்ளும்.
விருது பெறும் 8 இந்திய மாணவர்களின் பெயரையும் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்தியாவுக்கான இங்கிலாந்து துணைத் தூதர் மைக் நிதவ்ரியான்கிஸ் அறவித்தார்.