குற்றாலம் ஐந்தருவி பழத் தோட்டம் ரூ. 5.75 கோடியில் பூங்காவாகிறது
குற்றாலம் ஐந்தருவியி்ல் சுமார் 40 ஏக்கர் பரப்பரளவில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறையின் பழத்தோட்டம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மரக்கன்றுகள், பூச்செடிகள், மூலிகை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் ஐந்தருவியை ஓட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பழத்தோட்ட பண்ணைக்கு ஆண்டுதோறும் குற்றாலம் வரு்ம் சுற்றுலா வரும் பயணிகள் வந்து அழகு செடிகளை வாங்கி செல்வது வழக்கம்.
பழத்தோட்ட அருவி என்றழைக்கப்படும் (விஐபி) அருவி அமைந்திருப்பது இந்த பண்ணைக்குள்தான். தற்போது குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஊட்டி, கொடைக்கானல், போன்ற சுற்றுலா தலங்களில் அமைக்கப்படும் பூங்காவை போல் இங்கு சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட பூங்காவை ரூ.5.75 கோடியில் அமைத்திட தோட்டக்கலை துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் அதற்கான தொடக்கவிழா நடத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.













Click it and Unblock the Notifications