பெண் தியாகிக்கு முழு ஓய்வூதியம்: கருணாநிதி உத்தரவு
செங்கோட்டை: பெண் சுதந்திரப் போராட்ட தியாகி கோதையம்மாளுக்கு முழு ஓய்வூதியம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந்திய விடுதலை போராட்டத்தில் வீரவாஞ்சியுடன் சேர்ந்து திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையை கொன்ற வழக்கில் முதன்மை குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்று தூக்கு மேடை வரை சென்றவர் கஸ்பா அழகப்ப பிள்ளை. இவரின் புதல்வி தியாகி கோதையம்மாள் (85).
தியாகி கோதையம்மாள் அவர்கள் சிறுமியாக இருக்கும்போது தனது தகப்பனாருடன் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். பலமுறை வீட்டு காவலில் இருந்தவர். தனது தகப்பனாருடன் பலமுறை காவல் கைதியாகவும், கைது செய்யப்பட்டு பல துன்பங்களுக்கு ஆளானவர்.
வெள்ளையனே வெளியே இயக்கப் போராட்டத்தின்போது, வெள்ளைக்கார போலீஸ் இவர் வீட்டு பொருட்களை தெருவில் தூக்கி எறிந்தும், இவரை அடித்தும் துன்புறுத்தினர். அடித்த அடியின் தழும்பு தன் முதுகில் உள்ளது என்று கூறினார். வெள்ளைக்கார போலீசின் அட்டுழியம் தாளாது, செங்கல்பட்டு மாவட்டம், வீரவாரம் கிராமத்தில் தலைமறைவு வாழ்வு வாழ்ந்தவர்.
தற்போது தனது வீட்டில் தேவாரம், திருக்குறள் வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறார். தமிழ் தொன்டாற்றியும் வருகிறார். இவருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வீரவாஞ்சி தினம்-வீரவாஞ்சியின் நூற்றாண்டு ஆரம்ப தினமான ஜூலை 17-ம் தேதி தியாகி முழு ஓய்வூதியம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக முதலமைசசருக்கு தியாகி கோதையம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications