நெல்லையப்பர் கோவிலில் ஜன 2ல் மகா ம்ருத்யுஞ்ஜய வேள்வி
நெல்லை: நெல்லை, அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் ஜனவரி 2ம் தேதி மகா ம்ருத்யுஞ்ஜய வேள்வி நடைபெறவுள்ளது.
நெல்லை ஜங்ஷனில் இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் மாவட்ட தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் மாநிலச் செயலாளர் சங்கர நாராயணன், மாநில அமைப்பு செயலாளர் சுதாகர் குழுவின் வளர்ச்சி குறித்து பேசினர்.
தொடர்ந்து மாநகரத்தில் இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒன்றியம், மாநகரம், மண்டலம் வாரியகாவும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் இந்து ஆலய பாதுகாப்பு குழுவுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நெல்லையப்பர் கோவில், ராஜகோபால சாமி கோவில், கைலாசநாதர் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள பக்தர் பேரவைக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
நெல்லையப்பர் கோவிலில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவால் ஆண்டுதோறும் நடத்தப்படும் மகா ம்ருத்யுஞ்ஜய ஜபவேள்வி வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி வெகுவிமரிசையாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வேள்வியில் நெல்லை மாவட்டத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களை திரட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications