சரஸ்வதி பூஜை கொண்டாட உகந்த நேரம் எது?
சென்னை: நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதைக் கொண்டாட எது நல்ல நேரம் என்பதை ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்குப் புத்தகங்கள், படிக்கும் புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்துக்கு வெள்ளை நிற மலர்களால் அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும்.
சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வைத்து வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் சிறப்பானது.
காலை 6.30 முதல் 8 மணிக்குள்ளும், மதியம் 12.30 முதல் 1.20 மணிக்குள்ளும், மாலை 5 முதல் 6 மணிக்குள்ளும், 6.30 முதல் 7.30 மணிக்குள்ளும் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடலாம்.
விஜய தசமி தினத்தன்று தொழில் துவக்க, புத்தகம் படிக்க நல்ல நேரம்
காலை 5.30 முதல் 6.30 வரை, 9.00 முதல் 9.50 வரை, 11 முதல் 11.50 வரை.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் 9.50 மணிக்குள் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்க நல்ல நேரமாகும்.