இலங்கையில் மீண்டும் தேவாங்கு!

Subscribe to Oneindia Tamil

Loris
இலங்கை வனப்பகுதியிலிருந்து மறைந்து விட்டதாக கூறப்பட்ட ஹார்டன் பிளெய்ன்ஸ் ஸ்லென்டர் லாரிஸ் என்ற தேவாங்கு விலங்குகள் மீண்டும் அங்கு நடமாடவது தெரிய வந்துள்ளது.

மத்திய இலங்கை வன ஆய்வாளர்கள் இந்த குரங்கை படம் பிடித்துள்ளனர். ஆப்பிரிக்கா, தென் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில்தான் இந்த லாரிஸ் எனப்படும் தேவாங்குகள் காணப்படுகின்றன.

அதிலும் இலங்கையில் இருந்து தேவாங்கு இனம் மறைந்து போய் விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் தேவாங்குகள் தென்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

தேவாங்கு ஒன்றைப் படம் பிடித்துள்ளனர் சமன் கமகே என்பவர் தலைமையிலான ஆய்வுக் குழு. இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளாக இந்த தேவாங்கு இனத்தை யாரும் பார்த்ததில்லை. எனவே இது அழிந்து போய் விட்டதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தேவாங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

மத்திய இலங்கையில் உள்ள ஒரு வனப்பகுதியில் வைத்து தேவாங்கை கண்டு படம் பிடித்துள்ளோம். அழிந்து போய் விட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+