ரூ.11.69 கோடிக்கு ஏலம் போன ஹுசேன் ஓவியங்கள் : ஒரு ஓவியம் ரூ. 3.6 கோடிக்கு போனது
நியூயார்க்: பிரபல ஓவியர் எம். எப். ஹுசேனின் ஓவியங்கள் நியூயார்க்கில் ரூ. 11.69 கோடிக்கு ஏலத்தில் சென்றுள்ளது.
நியூயார்க்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் எம். எப். ஹுசேனின் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டது. இதில் அவர் இத்தாலிய திரைப்பட இயக்குநர் ராபர்டோ ரோஸ்ஸலினிக்கும், அவரது இந்திய மனைவி சோனாலி சென் ராய் தாஸ்குப்தாவுக்கும் பரிசாக கொடுத்த ஓவியங்கள் உள்பட 15 ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன.
1958-ம் ஆண்டு இத்தாலிய இயக்குநர் இல்லத்தில் வைத்து வரைந்து கொடுத்த சிங்க் சென்ஸ் என்ற ஓவியம் மட்டும் ரூ. 3.6 கோடிக்குச் சென்றது. கடந்த 16-ம் தேதி தான் ராபர்டோ தனது 95-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதை விட அவருக்கு வேறு சிறந்த பிறந்த நாள் பரிசு கிடைத்திருக்காது.
ஹுசேனின் முயற்சிக்கு கடைசியில் பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காகத் தான் அவர் 1950-களில் இத்தாலியில் ரோஸ்ஸலினியுடன் தங்கி ஓவியங்கள் வரைந்து வந்தார்.












Click it and Unblock the Notifications