அபுதாபியில் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க கருத்தரங்கம்
அமீரக காயிதெமில்லத் பேரவையின் மூத்த தலைவர் களமருதூர் அல்ஹாஜ் ஷம்சுத்தீன் தலைமையில், பனியாஸ் நிருவன நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ்.அப்துல் ஹமீத் மரைக்காயர், அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது ஆகியோர் முன்னிலையில் இக் கூட்டம் நடந்தது.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா வரவேற்றுப் பேசினார்.
அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது, ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத்,மூத்த வழக்கறிஞர் இஜாஜ் அஹமத்,இந்தியன் பள்ளி தலமையாசிரியர் ஷேக் அலாவுத்தீன், காயிதெமில்லத் பேரவை துணைத்தலைவர் ஷம்சுதீன்,கேரள முஸ்லிம் கலாச்சர மைய பொதுச் செயலாளர் ஷர்ஃபுத்தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் சிரப்புரையாற்றினார்.
காயிதெமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும்,மாநில மாநாட்டின் விழாக் குழுத்தலைவருமான அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலை ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நிறைவுப் பேருரை நிகழ்த்தினார்.
ராமநாதபுரம் எம்.எஸ்.பரகத் அலி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை அமீரக காயிதெமில்லத் பேரவையின் அபுதாபி மண்டலச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களின் ஜமாஅத் நிர்வாகிகள், நல சங்கங்களின் பொறுப்பாளர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்துக் கொண்டனர்.













Click it and Unblock the Notifications