அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய்கள் குறித்து புதிய பாடம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய்களைத் தடுப்பது குறித்த புதிய பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்த புதிய பாடப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
இதன்படி போஸ்ட் டிப்ளமோ இன் கிளினிக்கல் டயபெடாலஜி என்ற இந்த புதிய படிப்பிற்கு அண்ணாமலை பல்கலைக்கழகம், இந்திய நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சி நிறுவனம், டாக்டர் ஏ. ராமச்சந்திரனின் நீரிழிவு மருத்துவமனை ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு இந்த புதிய படிப்பிற்கான விண்ணப்பத்தை வெளியிட்டார்.
தொலை தூரக் கல்வி மூலம் கற்பிக்கப்படும் இந்த படிப்பானது நீரிழிவு நோய்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகின்றது.
இந்த விழாவில் டாக்டர் ஏ.ராமச்சந்திரன், தொலை தூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.பி. நாகேஸ்வரராவ், பேராசிரியர் என். சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications