கோவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்-மாணவர்கள், ஆர்வலர்கள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

இன்று 26.12.2010 காலை 10.30 மணியளவில் கல்வியகம் அரங்கில் தொடங்கிய பயிலரங்கில் திரளான மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள்,வலைப்பதிவர்கள் கலந்துகொண்டனர்.
பிரின்சு பெரியார் அறிமுக உரையாற்றினார். வசந்தம் இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.
இலதானந்து கலந்துகொண்டு தம் வலைப்பதிவு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேராசிரியர்கள் துரை, ரவி ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.
கோவை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். தமிழ்த்தேனீ, அமெரிக்காவிலிருந்து வைரம் ஸ்கைப்பில் வந்து உரையாடினர். மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டின் பல கூறுகளும் பயிற்றுவிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications