சர்வதேச சுற்றுலா தினம்-குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சங்கு மாலை போட்டு வரவேற்பு
கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சங்கு மாலை போட்டு வரவேற்கப்பட்டனர்.
இன்று சர்வதேச சுற்றுலா தினமம் கொண்டாடப்பட்டது. உலகெங்கும் கொண்டாடப்பட்ட இந்த தினம் தமிழகத்திலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
கன்னியாகுமரிக்கு இன்று வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளை, சுற்றுலாத்துறையினர் சங்குமாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய கையேடுகளும், சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.
இதேபோல் ஊட்டிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊட்டி படகு இல்லம் மற்றும் மலை ரயில் நிலையத்துக்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேரில் வந்து வெளிநாட்டுப் பயணிகளை இனிப்பு வழங்கி வரவேற்றார்.
இதேபோல பிற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வரவேற்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications