மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தைக் கண்டித்து நெசவாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூரில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நெசவாளர்கள் தங்களது வீட்டின் முன்பு கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் சுமார் 6130 கை நெசவுத் தொழிலாளர் குடும்பங்கள் விசித்து வருகின்றன. பருத்தி நூல் ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும், பருத்தியை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகளே நெசவாளர்களுக்கு மானிய விலையில் நூல் வழங்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்து பட்டு இறக்குமதி செய்து, வரி இல்லாமல் நெசவாளர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும், 50 சதவிகித மானியத்தில் ஜரிகை வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்து மறுமூலதனம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு 850-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து ஜெயங்கொண்டம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வடிக்கும் நெசவாளர்கள் தங்களது வீடுகளின் முன்பு கருப்புக்கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+