எழுத்தாளர் ராணா குப்தாவுக்கு காமன்வெல்த் ரைட்டர்ஸ் பரிசு
Subscribe to Oneindia Tamil

சோலோ நாவலுக்காக இந்தப் பரிசு குப்தாவுக்குக் கிடைத்துள்ளது. சிட்டான் ராக் என்ற நூலுக்காக சிறந்த முதல் நாவலுக்கான பரிசு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர் கிளன்டா கெஸ்ட்டுக்குக் கிடைத்தது.
பரிசளிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், குப்தாவுக்கு விருதினை வழங்கினார்.
38 வயதே ஆகும் குப்தா எழுதியுள்ள 2வது நாவல்தான் சோலோ. பல்கேரியா குறித்த நூல் சோலோ.
காமன்வெல்த் ரைட்டர்ஸ் பரிசு விழா டெல்லியில் நடப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications